பாடசாலையின் நூலக ஆசிரியர் மற்றும் தமிழ்ப் பாட ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பித்து கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பும், மாணவகளை ஊக்கப்படுத்தும் பட்டிமன்றமும் இடம்பெற்றது. நிகழ்வின் பரிசுக்கான அனுசரணையினை பாடசாலையின் நூலக ஆசிரியை செல்வி யோ.சுப்பிரமணியம் அவர்களும், உபசரணை அனுசரணையினை கதிரவன் த.இன்பராசா அவர்களும் வழங்கியிருந்தனர். நிகழ்வு சிறப்படைய ஒத்துழைப்பு வழங்கிய அத்தனை பேருக்கும் எமது நன்றிகள்.
செய்திகள்






