புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு க.பொ.த (சா/த) பரீட்சை : தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது.
வலயம் முதலிடம் எனும் செய்தி வெளியாகி ஒரு நாளில் இடம்பெற்ற இந்நிகழ்வினை மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழையமாணவர் சங்கம் ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன்போது வலயக்கல்வி பணிமனையினை பாராட்டி, பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கு " விவேக விருது " வழங்கி, பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பா சமர்ப்பித்து, சந்தன மற்றும் மலர் மாலை அணிவித்து கௌரவித்தமை விசேட அம்சமாகும். இச்செயற்பாட்டிற்கு ஒத்துழைத்த புதுக்குடியிருப்பு கல்விச் சமூகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.






